நடிகையுடன் தொடர்பு: நடிகர் கைது
ஒரு வருடத்துக்கு முன் ஆனந்துக்கு திருமணம் ஆனது. மனைவி பெயர் பரணி. ஆனந்த் 2-வதாக நடித்து வரும் படம் நிதி நெருக்கடியால் பாதியில் நிற்கிறது. அதற்கு பணம் கேட்டு நடிகர் ஆனந்த் மனைவியை சித்ரவதை செய்வதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி பெங்களூர் தியாகராய நகர் போலீசில் பரணி அளித்துள்ள புகாரில்,
’’எனக்கும் ஆனந்த்துக்கும் 1 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆனந்த் தனது படம் பாதியில் நிற்கிறது. எனவே உன் நகைகளை விற்று ரூ.50 லட்சம் கொடு என்று கேட்டார். நான் மறுத்ததால் என்னை அடித்து உதைத்தார்.
மேலும் என் பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வருமாறும் கொடுமைப்படுத்துகிறார். அவருக்கு நடிகை ரம்யா பர்னாவுடன் தொடர்பு இருக்கிறது. அவருக்கு செலவு செய்யத்தான் என்னிடம் பணம் கேட்கிறார். நான் தர மறுத்ததால் என்னை அடித்து துன்புறுத்துகிறார்’’என்று கூறியுள்ளார்.
இந்த புகாரை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நடிகர் ஆனந்த்தை கைது செய்தனர்.
0 comments:
Post a Comment